For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் கடையை மூடுங்க.. கட்டடத்தின் மேல் ஏறி 2 பேர் தற்கொலை மிரட்டல்.. சீர்காழியில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி கட்டிடத்தின் மேலேறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் சீர்காழியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சீர்காழி: புதிய மதுக்கடையை மூடக் கோரி 3 மாடி கட்டிடத்தில் ஏறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே உள்ளது தருமகுளம். இங்கே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Men threaten suicide, demanding Tasmac shop close

இந்நிலையில், இன்று மாலை இரண்டு பேர் உயரமான கட்டிடத்தின் மேல் ஏறி நின்று கொண்டு, டாஸ்மாக் கடை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக டாஸ்மாக் கடை மூடப்படவில்லை என்றால் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று இருவரும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அருகில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சீர்காழியில் பரபரப்பு நிலவி வருகிறது.

English summary
Two men have stood top of the building demanding Tasmac shop close in Sirkazhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X