பாஜகவின் எதிர்ப்புகளுக்கு அடிபணிகிறதா மெர்சல்... 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு
மெர்சல் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மெர்சல் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனைக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன.
அப்போது படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளான மருத்துவம், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வரும் 23 அல்லது 24-ஆம் தேதியில் தணிக்கை குழுவிடம் கடிதம் கொடுத்து பின்னர் நீக்கப்படும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இல்லாததால் அவற்றை நீக்க தேவையில்லை என்று தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் தரப்பு இவ்வாறு முடிவு எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications