உங்களைப் பார்த்தா அப்படியே எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு இருக்கீங்க!
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இன்னும் யாரெல்லாம் போட்டிடயிடப் போறாங்களோ தெரியலையே. இதோ எம்ஜிஆரின் அண்ணன் மகனும் களத்தில் குதித்து விட்டார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை வைத்து பலரும் பலவிதமான பரீட்சார்த்த முயற்சிகளி்ல இறங்கி வருகின்றனர். இறங்கித்தான் பார்ப்போமே என்ற நப்பாசையில் பலரும் களம் குதித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் ஒருவர் போட்டியில் குதித்துள்ளார். அவர் எம்ஜி சக்கரபாணியின் மகன் எம்சி சந்திரசேகர் என்கிற எம்ஜிசி சந்திரன் ஆவார். இன்று பிற்பகல் 12. 30 மணிக்கு அவர் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளாராம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது ரத்த வாரிசு போட்டியிட்டு கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம் செய்ய மக்கள் ஆதரவு வேண்டுகிறோம் என்று சந்திரனின் செயலாளர் எஸ்எஸ் முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications