For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுவதற்கெல்லாம் தன்னால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமாக தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுவதற்கெல்லாம் தன்னால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமாக தெரிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு முன்னரே இரு அணியினரும் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து அவர்களும் குழம்பி மக்களை குழப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு அணியினர் மீது மற்றொரு அணியினர் குறை கூறுவதும் என தொடர்ந்து நடைபெற்றுகத் கொண்டே வருகிறது.

 நேற்று பேச்சுவார்த்தை

நேற்று பேச்சுவார்த்தை

இந்நிலையில் நேற்று நிறைந்த அமாவாசை தினம் என்பதால் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அதிமுகவின் தலைமை கழகத்தில் கடந்த 3 நாள்களாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும், மூத்த அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 நல்ல நாள் என்பதால்

நல்ல நாள் என்பதால்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த அமைச்சர் சிவி சண்முகம் மிகவும் பிரஸ்ஸான முகத்துடன் இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றார். மேலும் தினகரன் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி விட்டோம். எங்களுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை என்றார்.

 சுயமுடிவு

சுயமுடிவு

ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறும் தகவல்கள் தவறு. இது எங்களது சொந்த முடிவு. அவர்கள் சொன்னதற்காக நாங்க செய்யவில்லை என்றார்.

 எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு காட்டமாக வந்திருந்த சிவி சண்முகத்திடம், பே்ச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது. நாங்க பேச்சுவார்த்தைக்கு தயார்னு சொல்லிட்டோம். ஆனால் அவர்கள் தினம் ஒரு பேச்சு பேசுகிறார்கள் என்றார்.

 பதில் சொல்ல முடியாது

பதில் சொல்ல முடியாது

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது என்றார். இதுகுறித்த கேள்விக்கு சிவி சண்முகம் பதிலளிக்கையில், ஆங்.. அவர் எல்லாத்தையும் சொல்வாரு... அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது என்று காட்டமாக தெரிவித்துவிட்டார்.

English summary
ADMK Merger talks are going to start soon. Minister CV Shanmugam condemns O.Panneer selvam on his Kodanad Estate Security guard murder comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X