ஆளுதாங்க பார்க்க மிரட்டலானவர்.. மனசு குழந்தையை போல்.. மனம் தாங்காமல் அழுத அமைச்சர் காந்தி!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு வாழ்வளித்துவிட்டு சென்ற நிகழ்வு அமைச்சர் காந்தியை கண் கலங்க வைத்துவிட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அருள் -பரிமளா தம்பதியின் மகன் ராகவேந்திரா கடந்த 18ஆம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 10 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ராகவேந்திரா மூளைச் சாவு அடைந்திருக்கிறார்.

இதையடுத்து மூளைச்சாவு என்றால் என்ன உடல் உறுப்புகள் தானத்தின் அவசியம் குறித்தெல்லாம் சிறுவனின் பெற்றோருக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். இதையடுத்து தங்கள் மகன் மரணித்தாலும் கூட அதனால் 5 பேருக்கு வாழ்வு கிடைக்கிறதே என்ற நல்லெண்ணத்தில் உடல் உறுப்புகள் தானத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மின்னல் வேகத்தில் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு இதயமும், நுரையீரலும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 பேர் புதுவாழ்வு பெறுகிறார்கள். இந்நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவன் ராகவேந்திரா உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் காந்தி, சிறுவனின் பெற்றோரை பார்த்து ஆறுதல் சொன்னார். அப்போது அவர்கள் கதறி அழுததை பார்த்ததும் அமைச்சர் காந்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெற்றொரின் காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் என உணர்ச்சிவசப்பட்டார். அமைச்சர் காந்தியை பொறுத்தவரை பார்க்க மிரட்டலான தோற்றம் கொண்டவர். அதேபோல் அவர் பேசினாலும் மிரட்சியாக பேசுவார். ஆனால் அப்பேற்பட்ட நபரே அந்த ஏழை பெற்றோரின் பெருந்தன்மையான மனதை பார்த்து கைக்கூப்பி வணங்கி அங்கிருந்து சென்றார். இதனிடையே சிறுவன் ராகவேந்திரன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications