இப்படி பேசாதீங்க வானதி.. டென்ஷனான ஜெயக்குமார்!
தமிழக அரசின் எந்த டெண்டரிலும் ஊழ்ல் நடக்கவில்லை வானதி சீனிவாசன் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழக அரசின் எந்த ஒப்பந்தத்திலும் ஊழல் நடக்கவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜகவின் வானதி சீனிவாசன் பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துபட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : தமிழக அரசு முதல்வர் பழனிசாமியின் வழிகாட்டுதல்படி சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அவ்வவோது முதல்வர் ஆலோசனை அளிப்பதால் அரசுத் துறை வேசமாக செயல்படுகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடலோரக் காவல்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தை பொருத்தமட்டில் எப்போதுமே தமிழக அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மீனவர் பிரச்னை
எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று பல முறை இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டுவிட்டது. மீனவர்கள் மீதான தாக்குதல்களை எந்த நிலையிலும் ஏற்க முடியாது, இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே சமரசம் ஏற்படுத்த முடியும். அதற்கான சூழல் உருவாகும்.

பூதாகரமாக்குகின்றன
ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதை எதிர்கட்சிகள் தேவையின்றி பூதாகரம் ஆக்குகின்றன. ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது என்பது சாதாரணமான நடைமுறையே என்றார்.

பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது
ஆளுநரின் ஆய்வின் போது அவருடன் இருந்த பாஜன மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் ஊழல் கரை படிந்த ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி இருந்ததற்கும், ஜெயக்குமார் பதிலளித்தார். வானதி சீனிவாசன் போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக அரசின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கக் கூடாது. அரசின் எந்த டெண்டரிலும் ஊழல் நடக்கவில்லை.

எதிர்க்கட்சி என்பதால் இப்படியா?
இப்போதெல்லாம் ஒப்பந்த முறை இணைய வழியிலும் உள்ளது அதனால் எந்த ஊழலும் செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் என்பதற்காக அரசு மீது பொத்தாம் பொதுவாக குறை சொல்லாமல் உண்மை நிலையை சொல்ல வேண்டும். போகிற போக்கில் அதிமுக அரசு மீது சேற்றை வாரி வீசுவதை அனுமதிக்க முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications