யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? அமைச்சர் மெய்யநாதனை சூடாக்கிய காங்.MLA! கடைசியில் கப்சிப்!
மயிலாடுதுறை: மயிலாடுத்துறை அருகே அமைச்சர் மெய்யநாதன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர் காதுபடவே யாரை கேட்டு நிகழ்ச்சியை நடத்துறீங்க என வினவி வாங்கிக் கட்டிக்கொண்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார்.
''முடிஞ்சா கொஞ்ச நேரம் இருங்கங்க, இல்லைன்னா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு போங்க'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு அமைச்சர் மெய்யநாதன் சூடாக பதிலளித்ததால் வேறுவழியின்றி அவர் கப்சிப் என்றானார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் மெய்யநாதன் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் மெய்யநாதன் காதுபடவே அவரை சூடாக்கும் வகையில், பக்கத்தில் நின்ற அதிகாரியிடம் யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? என ராஜ்குமார் எம்.எல்.ஏ. எகிறினார்.
இதையடுத்து வாங்க கேமரா இருக்குது என திமுக மாவட்டச் செயலாளர் நிவேதிதா முருகன் அவரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அமைச்சரோ காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிடலாம் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரின் ஆதரவாளராக அறியப்படுபவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ.
இதேபோல் மற்றொரு இடத்தில் திமுக கவுன்சிலர் தனக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என்று சத்தம் போட்ட நிலையில், ''இங்கே வாங்க சுரேஷ், என அந்த திமுக கவுன்சிலரை அழைத்த அமைச்சர் மெய்யநாதன், வார்த்தைகளை அளந்து பேசுங்க'' என எச்சரித்தார். அதேபோல் அவர் அருகில் நின்று கொண்டிருந்த திமுக மாவட்டச் செயலாளர் நிவேதிதா முருகன், திமுக கவுன்சில்கர் சுரேஷை கைப்படவே தள்ளி போட்டோவுக்கு போஸ் கொடுக்காத வகையில் பார்த்துக் கொண்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications