சிலை கடத்தல் வழக்கு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது.. பொன் மாணிக்கவேலை சாடிய அமைச்சர்!
சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
ஐஜி பொன்மாணிக்கவேலின் தலைமையில் சிலை தடுப்பு பிரிவு வந்தபிறகு சிலைக்கடத்தல் வழக்குகள் விறுவிறுப்படைந்தன.

சிலை கடத்தல்
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் தாயகம் திரும்பின. ஐஜி பொன் மாணிக்கவேலின் பணியை பலரும் பாராட்டி வந்தனர்.

பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு
இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐஜி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

கடும் வாக்குவாதம்
இதனால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கும் நீதிமன்றத்திலே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சிபிஐக்கு மாற்றுங்கள்
இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்றும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவே விசாரிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினருடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தனி நபர் விளம்பரம்
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்திற்காக நடைபெறக்கூடாது; வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறவேண்டும் என்பதற்காகவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது
மேலும் கிராமங்கள் தோறும் மருத்துவமனை உள்ளது; விளம்பரத்தை மக்கள் நம்பி வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications