பாளை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தப்பிய சிறுவர்களில் ஒருவன் தற்கொலை முயற்சியால் பரபரப்பு
பாளையம்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டனை தாக்கிவிட்டு தப்பிய நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் தற்கொலைக்கு முயன்றான்.
தூத்துக்குடி: பாளையம்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வார்டனை தாக்கி விட்டு தப்பி ஓடிய சிறுவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நகை கடை நடத்தி வருபவர் செந்தில். கடந்த 30-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த 2ம் தேதி சாத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து தூத்துக்குடியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர் பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு மாற்றப்பட்டான். இந்நிலையில் 13-ஆம் தேதி இரவு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 12 சிறுவர்கள் காவலாளியை தாக்கி விட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டது. தப்பி ஓடியவர்களில் கோவில்பட்டி நகை கடை தொடர்புடைய சிறுவனும் இருந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
நள்ளிரவில் அங்குள்ள புலிகுகை பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது வயிற்றை கிழித்துள்ளான். இதை பார்த்து அதிர்ந்த போலீஸார் உடனடியாக கத்தியை பறிமுதல் செய்து உடனடியாக இரவோடு இரவாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தப்பி ஓடிய இதர சிறுவர்களில் நான்கு பேர் இரவே சிக்கினர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications