மிசா பாண்டியன் Vs நூர்ஜஹான்! மதுரை மாநகர திமுக மல்லுக்கட்டு! அமைச்சர் பிடிஆரிடம் சென்ற பஞ்சாயத்து!
மதுரை: மதுரையில் திமுக பெண் கவுன்சிலரை மாநகராட்சி மண்டலத் தலைவியின் கணவர் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் நூர் ஜஹான். காஜிமார் தெருவை சேர்ந்த இவர் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் மதுரை மாநகரட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நூர் ஜஹான், தனது வார்டு பிரச்சனை குறித்து மண்டலத் தலைவர் என்ற முறையில் பாண்டிச்செல்வியிடம் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த பாண்டிச்செல்வியின் கணவரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், நன்றி மட்டும் தான் சொல்லணும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

பதிலுக்கு திமுக பெண் கவுன்சிலரான நூர்ஜஹான், அப்படியெல்லாம் தன்னால் போக முடியாது என்றும் தனது வார்டு பிரச்சனையை பற்றி தாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள் என தில்லாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து தான் நூர் ஜஹானை மிசா பாண்டியன் கோபத்தில் சற்று காட்டமாக திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பொம்பளைபிள்ளைகிட்ட இப்படியாண்ணே பேசுவீங்க, பார்த்து பேசுங்கண்ணே என நூர்ஜஹானின் கணவர் பதிலுக்கு மிசா பாண்டியனிடம் குரலை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
நூர் ஜஹான் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் கவுன்சிலர் என்பதால் இந்த விவகாரம் மதுரையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பேசு பொருளாக மாறியது.
இதனிடையே நூர்ஜஹான் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை முறையிட்டிருக்கிறார். மேலும், மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதியிடமும் மிசா பாண்டியன் பற்றி நூர் ஜஹான் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கட்சியை கடந்து காவல்துறையினர் வரை புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
மாநகராட்சிகளில் இருந்து தினம் தினம் ஒரு புது பிரச்சனைகள் கிளம்புவதால் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
-
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி! -
1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம்












Click it and Unblock the Notifications