ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 வரை 7 நாள் கஸ்டடி!
சென்னையில் ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், கடந்த 23-ம் தேதி அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நேற்று விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி மறுத்தது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது மற்றும் தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 2 வழக்குகளில் கருணாஸ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் ஐபிஎல் வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்எல்ஏ கருணாஸை 7 நாள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனிடையே கருணாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்.. என் நாக்கை அறுப்பாங்களா? மத்திய அமைச்சர் கேள்வி! ]
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications