ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 வரை 7 நாள் கஸ்டடி!
சென்னையில் ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், கடந்த 23-ம் தேதி அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நேற்று விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி மறுத்தது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது மற்றும் தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 2 வழக்குகளில் கருணாஸ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் ஐபிஎல் வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்எல்ஏ கருணாஸை 7 நாள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனிடையே கருணாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்.. என் நாக்கை அறுப்பாங்களா? மத்திய அமைச்சர் கேள்வி! ]
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications