தொகுதி மக்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பேன்.. வேடசந்தூர் எம்.எல்.ஏ
தொகுதி மக்களின் கருத்தை அறிந்து முடிவு எடுப்பேன் என்று வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மக்களின் கருத்தை அறிந்து நல்ல முடிவெடுப்பேன் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ. வி.பி.பி. பரமசிவம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஓபிஎஸ் ஒரு அணியாகவும், சசிகலா மற்றொரு அணியாகவும் உள்ளனர். பிரிந்து கிடக்கும் நிலையில், எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சொல்லாமல் அமைதி காத்தி வருகிறார்கள்.

எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் மன்னார்குடி கோஷ்டி எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள 'கோல்டன் பே' என்ற ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலா மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ பரமசிவத்திற்கு தொகுதி மக்கள் தங்களது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம், ஓபிஎஸ்ஸை ஆதரிக்க வேண்டும் என்ற தகவல்களையும் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு வேடசந்தூர் தொகுதி வாசி ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்து ஆதரவு அளிக்கக்கோரி தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு அவர் அளித்துள்ள பதிலில், இரண்டு தினங்களில் வேடசந்தூர் வந்துவிடுவதாகவும், மக்களுக்காக செயல்படுவேன் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மக்களின் கருத்தை அறிந்து முடிவை அறிவிப்பேன் என்றார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications