மோடி அரசின் மூன்றாண்டு சாதனை: அதிமுக பாணியில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக
பாஜக அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: 2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்ட 'அம்மா ஸ்டிக்கர்' ஒட்டியதுபோல் மோடி அரசின் 3 ஆண்டுகால நிறைவை தமிழக பாஜக ஸ்டிக்கர் வெளியிட்டு கொண்டாடியுள்ளது.
மத்திய அரசின் மூன்று ஆண்டு சாதனை குறித்த இணையதள சேவையை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், பி.ஜே.பி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2014,மே 26 அன்று நாட்டின் ஆட்சித் தலைமைக்கு பொறுப்பேற்று கொண்டது.

மோடி அரசு
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

3 ஆண்டு நிறைவு
இத்தகைய திட்டங்களால் அடித்தட்டு மக்கள் எவ்வித பலனையும் பெறவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி மற்றும் இதர எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இன்றுடன் பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது.

நாடு முழுவதும் பயணம்
இதையடுத்து, பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதல்வர்கள் ஆகியோர் நாடு முழுவதும் சென்று மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்க உள்ளனர். அப்போது, பாஜக அரசின் மூன்று ஆண்டுகளின் செயல்பாடுகள் குறித்தும், மக்களிடம் விளக்கமளிக்க உள்ளனர்.

மோடி ஸ்டிக்கர்
இந்நிலையில், மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை குறித்த இணையதள சேவையை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜெ., பாணி
கடந்த 2011 -2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவியில் இருந்த போது 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதிமுகவினர் ஜெயலலிதா முகம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டினர். ஜெயலலிதா அரசை ஸ்டிக்கர் அரசு என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வசைபாடினர். இப்போது பாஜகவினர் அதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
-
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு












Click it and Unblock the Notifications