சசிகலா புஷ்பா மீது ராஜேஷ் கொடுத்த பரபரப்புப் புகார் இதுதான் !
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி.சசிகலா புஷ்பா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையர் சிவஞானத்திடம் சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் புகார் கொடுத்துள்ளா். நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சசிகலா புஷ்பா மீது திருநெல்வேலி காவல்துறை ஆணையரிடம் ராஜேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.















Click it and Unblock the Notifications