இன்னும் இருக்கிறது கன மழை.. எச்சரிக்கும் பிபிசி
சென்னை: தென் மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக பிபிசி வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பிபிசி வானிலை பிரிவு தனது டிவிட்டர் தளத்தில் இன்று மாலை வெளியிட்ட ஒரு தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேர செயற்கைக்கோள் படம் அடிப்படையில், அதிக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்னும் கன மழை வரும் நாட்களில் தென் மாநிலங்களிலும், இலங்கையிலும் பெய்யக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிபிசி வானிலை இலாகா கூறியபடி 2015ல் சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்தது. இது வெள்ளப் பெருக்கிற்கு காரணமானது. அதிலிருந்து பிபிசி வானிலை கூறும் தகவல்களுக்கு முக்கியத்துவம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று மாலைக்கு மேல் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மாவட்டத்தில் மதியம் முதலே நல்ல மழை பெய்தது.
தென் கேரளாவரையிலும் மழை நீடிக்கிறது. திருவனந்தபுரத்தில் பெய்த மழையால், கிரிக்கெட் போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது
S ASIA: Satellite from the last 24 hours shows heavy #monsoonal storms across S India & Sri Lanka. More heavy #rain to come. Stav D pic.twitter.com/XPbTB0uBku
— BBC Weather (@bbcweather) November 7, 2017












Click it and Unblock the Notifications