பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு மாதத்தில் 20 பயணிகள் பலியா? அதிர வைக்கும் பயணிகளின் குமுறல்
Recommended Video

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகே இன்று காலை நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு ஒரு மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சுவர் மோதி பலியானதாக சில பயணிகள் முறையிட்டு வருகிறார்கள்.
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்களில் 4 பேர் தண்டவாளம் அருகே இருந்த தடுப்பு சுவர் மோதி பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் நிருபர்களிடம் கூறுகையில், நேற்று இரவும் இதேபோன்று இங்கு சம்பவம் நடந்து 2 பேர் பலியாகினர். சடலங்களை எடுத்து அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு இரவு 9.30 ஆகிவிட்டது. எனவே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என நினைக்கிறோம். அதையடுத்தாவது, இரவோடு, சுவரை அகற்றியிருக்க வேண்டும் என்றார் ஒரு இளம் பயணி.
ஒரு முதியவர் கூறிய தகவல் ஷாக் ரகம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சுவர் மோதி 20 பயணிகள் இங்கு கொல்லப்பட்டனர் என்றார்.
ஆனால் ரயில்வே நிர்வாகம் அவ்வாறு எந்த தகவலும் இல்லை என கூறியுள்ளது. ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு கூறுகையில், இந்த சுவர் பல காலமாக அங்கேதான் உள்ளது. அதிக கூட்டம்தான் விபத்துக்கு காரணம். இந்த சுவரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், பாலங்களின் ஓரச்சுவர், மின் கம்பங்களிலும் பயணிகள் அடிபட வாய்ப்பு உள்ளது. எனவே டூவீலர் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை போல படிக்கட்டில் பயணிக்காமல் மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications