வைகோவுக்கு சிறையில் ப.சிதம்பரம் கம்பெனி கொடுப்பார்: மீண்டும் ஏழரையை கூட்டும் ஹெச். ராஜா!
வைகோவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் கம்பெனி கொடுப்பார் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் கைதாவார் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் சிறையில் உள்ள வைகோவுக்கு ப.சிதம்பரம் கம்பெனி கொடுப்பார் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளராக உள்ள ஹெச்.ராஜா அவ்வப்போது பரபர கருத்துகளையும் கூறியும் துடுக்குத்தனமாக பேசியும் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் பட்டுகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, விவசாயிகள் குறித்து கேள்வி கேட்ட நிரூபரை தேசத்துரோகியா எனக்கேட்டு பாய்ந்து பிராண்டினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வெள்ளக்காரி, வெள்ளைத்தோலு என இழிவான வார்த்தைகளால் அர்ச்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்
பல இடங்களில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.
|
வைகோவுக்கு கம்பெனி தருவார்
அதாவது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம் கைதாவர் என தெரிவித்துள்ளார். அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு கம்பெனி கொடுக்கலாம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு தொடர்பா?
முன்னதாக மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை தாக்கல் - உத்தரவு
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மே 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications