மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடல் சென்னை வந்தது!
சென்னை: ஆண்டஸ் மலைத் தொடரில் உயிரிழந்த மலையேற்ற வீரரான ஆந்திராவைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபுவின் உடல் இன்று சென்னைக்கு வந்தது. அவரது உடல் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
உலகின் உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்தவர் மஸ்தான் பாபு. கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி அர்ஜெண்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் மலை ஏறுவதற்காக சென்றார்.

ஆனால் அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் கிடந்த இடம் கடந்த ஏப்ரல் 3-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பாபுவின் அக்கா மல்லி டோரசன்னம்மா அர்ஜெண்டினா சென்று பாபுவின் பிரேதத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 13-ந் தேதி அவரது உடல், பனி படர்ந்த மலையில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டு வடக்கு அர்ஜெண்டினாவின் துக்குமன் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் செயற்கை ஊசி மூலமாக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாபுவின் சொந்த கிராமமான காந்தி ஜன சங்கத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications