சென்னையில் தாழ்வான பகுதிகளில் யாரும் இருக்க வேண்டாம்: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுங்கள் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

கன மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவுறுத்தலை டிவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயரச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நீரில் நடந்து செல்ல வேண்டாம் என்றும், தக்க காலணி அணிந்தே தேவையெனில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Floods:Move to a higher ground where people and animals can take shelter.#ChennaiRains pic.twitter.com/0U8PpbYFWi
— NDMA India (@ndmaindia) November 2, 2017












Click it and Unblock the Notifications