விபத்தில் அமைச்சர் முண்டே மரணம்: சாலை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய நேரம் இது
சென்னை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்துள்ள இந்த நேரத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்கான வழிகளை மத்திய, மாநில அரசுகள்
கண்டறிய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே டெல்லியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். பதவியேற்ற எட்டாவது நாளில்

இப்படியொரு சோகம் மத்திய அரசுக்கும், இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ளது.
மாநில முதல்வர் அந்தஸ்தில் உள்ள ஒரு மத்திய அமைச்சரே பலியாகும் அளவுக்கு சாலை விபத்துக்கள் சர்வ சாதாரணமாகி போய்விட்டன
என்பதற்கான லேட்டஸ்ட் உதாரணம் இது என்று எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் தினசரி சாலை விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் தான் அதிக அளவில் பலியாகின்றனர். மேலும்,
முக்கிய பிரமுகர்களும் பலியான சம்பவமும் உண்டு. அதற்கு உதாரணமாக பதவியேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி அருகே
சாலை விபத்தில் பலியானார்.
எனவே சாலை விபத்துக்கள் நடைபெற காரணம் என்ன, அதை தடுக்க தேவையான நடவிக்கைகள் என்ன, தற்போது என்ன விதமான சட்டங்களும்,
செயல்பாடுகளும் நடைமுறையில் உள்ளது, அதை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை எல்லாம் மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமாக
ஆராய்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.












Click it and Unblock the Notifications