அள்ளி வைத்த குப்பையை கொண்டு வந்து கொட்டிய நகராட்சி ஊழியர்கள்.. நாமக்கல்லில் ஒரு அலங்கோலம்!
ஆளுநர் வருகைக்காக சாலைகளில் குப்பை கொட்டப்பட்டது.
Recommended Video

நாமக்கல்: எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் சுத்தமா இருந்தாதான் பிடிக்கும். ஆனால் சுத்தமா இருப்பதுகூட சில நேரங்களில் இடைஞ்சலாக அமைந்துவிடுகிறது. அப்படித்தான் நாமக்கல்லிலும் நடந்திருக்கிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். போகிற இடங்களிலெல்லாம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இப்படித்தான் நேற்றும் ஆளுநர் நாமக்கல் மாவட்டத்துக்கு மக்களின் குறைகளை கேட்க வரப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

நாமக்கல்லுக்கு ஆளுநர் வரப்போகிறார் என்று அதிகாரிகள் சுழன்று சுழன்று வேலைபார்த்தார்கள். மாநகராட்சி சார்பில் அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆளுநர் எங்கெல்லாம் பொதுமக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வந்தததோ, எங்கெல்லாம் செல்ல போகிறார் என்ற விவரங்களை கேட்டு கொண்டு வேகமாக ஊழியர்கள் சுத்தம் செய்ய தொடங்கினர். குறிப்பாக நாமக்கல் பஸ் ஸ்டாண்டு.
நகராட்சி ஊழியர்களின் சீரிய உழைப்பால் பஸ் ஸ்டாண்டு சில மணி நேரங்களில் பளிச் சென்று மாறிவிட்டது. இவ்வளவு சுத்தத்தை கண்டதும் ஆளுநர் அசந்துவிடப் போகிறார் என பொதுமக்களும் நினைத்தனர். ஆனால் ஆளுநர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் தெரியவந்தது, அவர் வருவது தூய்மை இந்தியா திட்டத்திற்காக. குப்பைகளை அகற்றிதான் இந்த திட்டத்துக்கு விழிப்புணர்வை காட்ட முடியும்.
ஆனால் பேருந்து நிலையத்தில்தான் குப்பையே இல்லையே. அதனால் என்ன செய்வதென்றே ஒரு கணம் விழித்த நகராட்சி ஊழியர்கள், சுத்தமாக இருந்த இடத்தில் அள்ளி வைத்த குப்பைகளை மீண்டும் கொண்டு வந்து கொட்ட தொடங்கிவிட்டனர். இந்த சம்பவத்தை ஒருபக்கம் சிரிப்பும், மற்றொரு பக்கம் ஆச்சரியமுமாய் பொதுமக்கள் பார்த்து கொண்டு சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications