ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் நாளை மனு தாக்கல்!

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நாளை மனு தாக்கல் செய்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தினகரன், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் வேட்பாளர் யார் என்பது நாளை இறுதி செய்யப்பட உள்ளது.

Naam tamilar party candidate Kalaikottuthayam to file nominations tomorrow

திமுக போலவே நாம் தமிழர் கட்சியும் கடந்த முறை இடைத்தேர்தலின் போது வேட்பாளராக போட்டியிட்ட கலைக்கோட்டுதயமே இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கலைக்கோட்டுதயம் நாளை காலை 11 மணியளவில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுத் தாக்கலைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் பவர் ஹவுஸ் மேம்பாலம் அருகில் உள்ள தொகுதி அலுலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தலைமையில் இடைத்தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Naam tamilar party candidate Kalaikottuthayam to file nominations tomorrow

தமிழன் தொலைக்காட்சியை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் கலைக்கோட்டுதயம். சமூக பணி, தமிழ்த்தேசியம் மீது பற்று கொண்ட கலைக்கோட்டுதயம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+