அதிக அளவில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை – நாம் தமிழர் கட்சி அறிக்கை
சென்னை: விவசாயிகள் பாதிக்கப்படாமல் நெல் விற்பனையை மேற்கொள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாகத் திறக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த சீமான் அறிக்கையில், ''தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது தீவிர நெல் அறுவடை நடந்து வருகிறது.
வடகிழக்கு மழையின் துணையால் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் ஓரளவுக்கு நல்ல விளைச்சல் கிட்டியிருக்கிறது. ஆனால், அவற்றை உரிய விலைக்கு விற்க போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஒரு சில கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதமாக இருப்பதாகக் கூறி நெல்லைத் திருப்பி அனுப்புவதாகவும், இதனால் வெளி வியாபாரிகளிடம் மிகக்குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் விவசாயிகள் புலம்பி வருகிறார்கள். எனவே, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளின் விடிவுக்கு வழிசெய்ய வேண்டும்.
போதுமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்தும், கொள்முதல் கெடுபிடிகளைத் தளர்த்தியும், அதிகாரிகள் விவசாயிகளை உரிய மரியாதையுடன் நடத்த அறிவுறுத்தியும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல இக்கட்டுகளைக் கடந்து அறுவடையை முடித்திருக்கும் விவசாயிகள் உரிய பலனை அடைய அரசு உடனடியாக வழிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications