யாரும் வேண்டாம்.. சாக்கடை அடைப்பை சரிசெய்ய களமிறங்கிய நாம் தமிழர் கட்சியினர்!
சென்னையில் மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர் வடிகால்வாய் அடைப்புகளால் சாலைகளிலேயே தேங்கி நிற்கின்றன. இவற்றை நாம் தமிழர் கட்சியினர் களமிறங்கி தாங்களே அடைப்புகளை நீக்கினர்.
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், ஆர்கேநகர்ப் பகுதிகளில் களத்தில் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளைச் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி சரிசெய்தனர்.
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறது. பருவமழை தொடங்கி ஒரு வாரத்திலேயே கொட்டித் தீர்க்கும் அடை மழையால் சென்னை நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக கட்சியளிக்கின்றன. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சத்துடனே பொழுதை கழிக்கின்றனர்.

இந்நிலையில் சாக்கடை அடைப்பு, வடிகால்வாய்கள் அடைப்பு காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டு மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்ய வருவார்களா என்று காத்திருக்கின்றனர். உள்ளாட்சிக்கென பிரதிநிதிகளும் இல்லாததால் மக்கள் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
ஒரு சில பகுதிகளில் சில கட்சியின் பிரதிநிதிகள் மக்களிடம் இருக்கும் அன்பு காரணமாக தாங்களே முயற்சி எடுத்து வடிகால்வாய்களை அகற்றி வருகின்றனர். இதே போன்று நாம் தமிழர் கட்சியினர் சாக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்கும் பணியில் களத்தில் இறங்கியுள்ளனர்.
மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்து மக்கள்பணியில் நாம்தமிழர்!
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) November 4, 2017
இடம்: சோழிங்கநல்லூர் & #RKNagar 3-11-2017 pic.twitter.com/DPzvRqRjP3
சோழிங்கநல்லூர், ஆர்கேநகர்ப் பகுதிகளில் களத்தில் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளை கைகளாலேயே செரிசெய்ததோடு, நீர் ஓடத்தடையாக இருக்கும் தடுப்புகளை கடப்பாறைகளைக் கொண்டு சரி செய்தனர். இதே போன்று அஸ்தினாபுரம் ஏரிபகுதியில் கடந்த 2 நாளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரொட்டி, தண்ணீர் உள்ளிட்டவற்றை பல்லாவரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர்.
அஸ்தினாபுரம் ஏரிபகுதியில் கடந்த 2 நாளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரொட்டி, தண்ணீர் வழங்கும் பல்லாவரம் #நாம்தமிழர் #ChennaiRains pic.twitter.com/ypgL2IFAGt
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) November 4, 2017
மேலும் கடுமையான மழையிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தினர் தங்களால் இயன்றவற்றை விநியோகித்து மக்களின் சிரமத்தில் பங்கெடுத்து வருகின்றனர். எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணியாற்றும் நாம் தமிழர் கட்சியினரின் செயல் பாராட்டிற்குரியதே.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications