25 ஆண்டுகளுக்குப் பிறகு.. முதல் முறையாக "வெளிக்காற்றை" சுவாசித்த நளினி!
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 25 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் தந்தையின் இறுதி சடங்குக்காக முதல் முறையாக பரோலில் வெளியே வந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரில் நளினியும் முருகனும் தம்பதிகள்.

நளினி கைது செய்யப்பட்ட போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். சென்னை ராயப்பட்டையைச் சேர்ந்தவர் நளினி. அவரது கணவர் முருகன், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்னர் இந்த வழக்கில் நளினியின் தாயார் நர்ஸ் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் பெரும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதாக பல புத்தகங்கள் வெளியாகி உள்ளன. அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் நளினியும் ஒருவர். இவ்வழக்கு சென்னை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 1998ஆம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதியன்று நளினி, அவரது தாய் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் உட்பட மொத்தம் 26 பேருக்கும் தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நாட்டை அதிர வைத்தது.
இந்த சிறைவாச காலத்திலேயே நளினி அரித்ரா என்ற பெண் குழந்தையையும் பெற்றார். அவர் தற்போது பாட்டியின் அரவணைப்பில் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பின்னர் 26 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட நளினியின் தாய் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் உள்ளிட்ட 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் ராஜிவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோளை ஏற்று நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நளினி தன் தந்தையைப் பார்க்க பரோல் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் சிறை நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் நளினி முறையிட்டிருந்தார். இந்நிலையில்தான் அவரது தந்தை சங்கரநாராயணன் நெல்லையில் நேற்று காலமானார்.
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. நளினியும் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 12 மணிநேர பரோல் கொடுக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகள் சிறைவாசத்தில் முதல் முறையாக பரோலில் வெளியே வந்துள்ளார் நளினி.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications