தேசிய நல்லாசிரியர் விருது... தமிழகத்திலிருந்து 22 பேர் விருதுக்குத் தேர்வு
சென்னை: தமிழகத்தில் இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்க, நடுநிலைப்பள்ளியில் இருந்து 15 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து 7 ஆசிரியர்களும் தேர்வாகி உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்.தாஸ் (தலக்கஞ்சேரி, திருவள்ளூர்), எஸ்.சுவர்னாபாஸ் (மீஞ்சூர்), வி.கணேசன் (பொன்டூர்), சி.ஏகாம்பரம் (கீழமனக்குடி), என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர்), கே.சிற்றம்பலம் (இடையப்பட்டி), எஸ்.காளி முத்து (விஸ்வநாதப்பட்டி), பி.தனராஜ் (பொன்னம் பாளையம்).
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்.விஜய லலிதா (நரிகட்டியூர்), டீ.ராணிசிவகாமி (சூண்டி), அரசு உதவி பெறும் தனியார் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்.அமவோற்பவம் (செயிண்ட் ஜான்ஸ் பள்ளி, ராயப்பேட்டை, சென்னை), ஏ.ஜோசப்பன் செல்வமேரி (ராஜா பரமேஸ்வரி, அண்ணாநகர், மதுரை).
டி.எஸ்.அன்பு எப்சிபாஸ் (டி.என்.டி.டி.ஏ. ராஜமானிய புரம், தூத்துக்குடி), எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி), எம்.செல்வகுமார் (ராஜரிஜி அர்த்த நாரீச வர்மா தொடக்கப்பள்ளி, ராயபுரம், சென்னை).
அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்-வி.ஹரிமூர்த்தி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி, திருத்துறையூர், கடலூர்), என்.ராமச்சந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சி.தனபால் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன் குட்டை, ஈரோடு).
எ.பிரான்சிஸ் சேவியர் (தலைமை ஆசிரியர், ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி), பி.ஜார்ஜ்பால் (உதவி தலைமை ஆசிரியர், டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை).
தங்கபிரகாஷ் (முதல்வர் சன்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேட்டுகுளம் வேலூர்), வி.பழனியப்பன் (முதல்வர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெண்ணைமலை, கரூர்) ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் விருது வழங்கப்படும்.