For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாமக்கல் நூற்பாலையில் தீவிபத்து – பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு நாசம்!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அமைந்துள்ள நூற்பாலை ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

Namakkal loom factory got fired…

நாமக்கல் சேலம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இந்த நூற்பாலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஞ்சு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், நூற்பாலை சாதனங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து நாசமாகின.

தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ அக்கம் பக்கத்தில் பரவாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாமாகின.

English summary
Namakkal loom factory got fired and lakhs of things fired and destroyed. Fire men tried 5 hours and stopped the fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X