மகாத்மாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய குஷ்பு
சென்னை: மகாத்மா காந்தியின் 68 ஆவது நினைவு தினத்தினை ஒட்டி தமிழகத்தில் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 68 ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையின் கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை அருகே பந்தலும் போடப்பட்டிருந்தது. அந்த பந்தலில் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் பஜனை பாடல்களை பாடினார்கள். காந்தியின் நினைவாக 5 பேர் அங்கு அமர்ந்து ராட்டையில் நூலை நூற்றனர். இந்த காட்சிகளை பொதுமக்கள், கண்டு களித்தனர்.

தமிழக கவர்னர் ரோசய்யா காந்தியின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சிறிது நேரம் அவர்கள் அங்கு அமர்ந்திருந்து விட்டு சென்றனர்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நடிகை குஷ்பு காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவர் காந்தி படத்துக்கு மலர் தூவி விட்டு சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார்.

பஜனை பாடல்களையும், ராட்டையில் நூல் நூற்றதையும் பார்த்து ரசித்தார். 10 நிமிடங்கள் அங்கு அமர்ந்திருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவும் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சத்திய மூர்த்தி பவனில் காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
காந்தி படத்துக்கு தங்கபாலு, திருநாவுக்கரசர், குஷ்பு, வசந்தகுமார், கோபண்ணா, ஆர். தாமோதரன், ஆர்.கே. வெங்கட், டி.வி. துரைராஜ், எஸ்.வி. சங்கர், வெங்கடேஷ், விஜயதரணி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், ரங்கபாஷ்யம், நாஞ்சில் பிரசாத், எஸ்.எம்.திரவியம் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியும் எடுத்தனர். காந்தி பற்றிய குறும்படமும் ஒளிபரப்பட்டது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications