பொருள் வாங்க வந்த சிறுமியிடம் சில்மிஷம்... கடையை நொறுக்கிய மக்கள்... கடைக்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: காரைக்கால் அருகே கடைக்கு பொருள் வாங்க வந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதி மக்கள் அவரது கடையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அருகே, புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி ஒருவர், சம்பவத்தன்று தனது பள்ளிக்கு அருகில் உள்ள கடைக்கு எழுது பொருள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் செல்வமுத்து, அச்சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த கிராம மக்கள் அவரது கடையை அடித்து நொறுக்கினர். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வமுத்து கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து செல்வமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications