For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு: பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் தற்கொலை முயற்சி!

திருச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பயிற்சி எஸ்ஐகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பயிற்சி எஸ்ஐகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளராக திருச்செந்தூரில் உள்ளார்.

Near in Trichy two training sub inspectors commit suicide attempt

இதேபோல் திருச்சி பகுதியைச் சேர்த்தவரான வைத்தீஷ்வரி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காவல் நிலையத்தில் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளராக உள்ளார். பயிற்சி ஆய்வாளர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்த வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை. குடும்பத்தினர் காதலுக்கு எதர்ப்பு தெரிவித்ததால் கார்த்திக் மற்றும் வைத்தீஸ்வரி இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றனர்.

இதையடுத்து இருவரையும் மீட்கப்பட்டு திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பயிற்சி எஸ்ஐகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Near in Trichy two training sub inspectors commit suicide attempt for their parents not accepting their love. They two have been admitted in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X