பாதி வழியில் பழுதான அரசு பஸ்... நடந்தே ஊருக்கு சென்ற மாணவிகள்- பீதியில் பெற்றோர்
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து சோழபுரம் செல்லும் அரசு பேருந்து ஒன்று பாதி வழியில் பழுதாகி நின்றதால், அதில் பயணம் செய்த மாணவிகள் நடந்தே ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
எட்டயபுரத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டயபுரத்தை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக எட்டயபுரத்திலிருந்து கீழஈரல் வழியாக சோழபுரத்திற்கும், அதே போல் எட்டயபுரத்திலிருந்து சிந்தலக்கரை, முத்தலாபுரம் வழியாக தப்பாத்திக்கும், கோவில்பட்டியிலிருந்து ராஜாபட்டிக்கும் காலை, மாலை என இரு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தப் பேருந்துகளில் அடிக்கடி டயர் வெடிப்பது உள்ளிட்ட பழுது ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து எட்டயபுரத்திலிருந்து சோழபுரம் செல்வதற்காக மாணவ, மாணவிகள் ஒரு அரசு பேருந்தில் ஏறினார். சுமார் அரை கிமீ தொலைவு மட்டுமே சென்ற அந்தப் பேருந்து, திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. அந்தப் பேருந்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர்.
இதனால் திகைத்த கண்டக்டரும், டிரைவரும் அந்த வழியாக சென்ற மற்ற அரசு பேருந்துகளை நிறுத்தி மாணவிகளை அனுப்ப முயன்றனர். ஆனால் எந்த அரசு பேருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை. இது நீண்ட நேரம் நீடித்ததால் வேறு வழியின்றி மாணவ, மாணவிகள் ஊருக்கு நடந்தே சென்றனர்.
மாலை நேரம் அதுவும் ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியில் மாணவிகள் கும்பலாக சென்றதால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் மாணவிகள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications