மனைவிக்கு தெரியாமல் பள்ளி மாணவியை மணந்த ஹோட்டல் அதிபர் கைது
நெல்லை: குழந்தையின்மையைக் காரணம் காட்டி, மனைவியை விரட்டி விட்டு 9ம் வகுப்பு பள்ளி மாணவியைத் திருமணம் செய்த ஹோட்டல் உரிமையாளரை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் வானுமாமலை (29). நாங்குநேரியில் ஹோட்டல் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் மங்களம். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் மங்களத்தை வீட்டை விட்டு வெளியேற்றினார் வானுமாமலை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் மங்களம்.

இந்நிலையில், மங்களத்திற்குத் தெரியாமல் சமீபத்தில் நாங்குநேரி அருகே உள்ள மாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை 2-வது திருமணம் செய்து கொண்டார் வானுமாமலை.
தகவல் அறிந்த மங்களம் இது தொடர்பாக நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்தவ செல்வி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், வானுமாமலை 15 வயதுள்ள மாணவியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கிறிஸ்தவ செல்வி நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். மேலும் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக வானுமாமலை மீது மனைவி மங்களமும் புகார் செய்தார். அவர்களது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வானுமாமலை மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
பின்னர், வானுமாமலையைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications