இந்தா பிடி லிஸ்ட்... இதுல இருக்கிற ஒரு ரவுடி கூட மிஸ் ஆகக் கூடாது.. அதிரடியில் நெல்லை போலீஸ்!
நெல்லை: நெல்லையிலை உலுக்கி வரும் கொலை, தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மாவட்டம் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் குதித்துள்ளனர். எஸ்.பியை மாற்றிய கையோடு ரவுடிகள் லிஸ்ட் எடுக்கப்பட்டு மொத்தம் 1000 பேரைக் குறி வைத்து போலீஸார் களம் இறங்கியுள்ளனராம்.
இந்த பட்டியலில் உள்ள ஒரு ரவுடி விடாமல் அத்தனை பேரையும் தூக்கி உள்ளே வைக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாதிய அடிப்படையில் கொலைகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை வீதம் நடந்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர். எங்கே எந்தக் கொலை விழுமோ என்ற அளவுக்கு மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது இந்த தொடர் கொலைகள்.

இதையடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் குதித்தது. சரக டிஐஜி சுமித் சரண், எஸ்.பி. நாகேந்திரன் நாயர் ஆகியோர் மாற்றப்பட்டனர். புதிய டிஜிபியாக முருகனும், எஸ்.பியாக விக்ரமனும் நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளும், டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள தனிபிரிவு எஸ்.ஐக்கள் மற்றும் ஏட்டுகளுடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல ரகசிய தகவல்கள் பரிமாறப்பட்டன.
மாவட்டம் முழுவதும் சாதிய பிரச்சினைகளை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் பற்றிய விவரங்களை எஸ்.பியிடம் அவர்கள் தெரிவித்தனர். சில விவரங்கள் ரகசியமாகவும் தெரிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களும் அவரிடம் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிரடி நடவடிக்கை மூலம் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதனிடையே எஸ்.பி.யின் தனிப்பிரிவு தவிர சாதிய மோதல்களை தடுக்க மற்றொரு சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் சேகரித்த விவரங்கள் மூலம் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 1000 பேர் ரவுடிகள் பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் தூக்கி உள்ளே போடவும் போலீஸார் முடிவு செய்துள்ளனராம். இதனால் ரவுடிகள், சமூக விரோதிகள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறதாம். எங்கே என்கவுண்டர் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications