கன்னியாகுமரி, ஈரோடு, காஞ்சிபுரத்திற்கு புதிய கலெக்டர்கள்: 5 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு
சென்னை: கன்னியாகுமரி,காஞ்சிபுரம்,ஈரோடு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நாகராஜன் மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்ட 49வது புதிய ஆட்சியராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் இருந்து பொறுப்பை பெற்று கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குமரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்த முயல்வேன். குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். குமரி சுற்றுலா மாவட்டம் என்பதால் சுற்றுலா வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றிய நாகராஜன் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பணியை தாமும் தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தவர்
புதிய ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர், ஐஐடியில் எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். புனேயில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு ஒதுக்கீட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த அவர், முதல் முறையாக ஆட்சித்தலைவராக குமரி மாவட்டத்தில் இன்று பொறுப்பு ஏற்றுள்ளார்.
காஞ்சிபுரம் ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம், காஞ்சிரபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு ஆட்சியர்
சேலம் மாவட்ட பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனர் எஸ்.பிரபாகரன், ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் பி.செந்தில்குமார், சேலம் பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஐஜிக்கள் பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் டிஐஜிக்களாக பணியாற்றி வரும் 5 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழக காவல்துறையில் டிஐஜிக்களாக பணியாற்றி வரும், சங்கர், அமல்ராஜ், திருஞானம், சண்முக ராஜேஸ்வரன் மற்றும் ஜெயராம் ஆகியோருக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications