இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ சோதனை
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்குத் தொடர்பாக கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவையில் இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸியான என் ஐ ஏ சோதனை நடத்தி வருகிறது.
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்து சசிக்குமார் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்படார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, கோவையைச் சேர்ந்த சதாம், அபுதாஹிர், முபாரக் மற்றும் சுபேர் ஆகிய 4 பேரை கைது செய்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்ஸியான என் ஐ ஏ தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
இதில், என் ஐ ஏ அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 4.30 மணி முதல் கோவையில் அரஸ், அஜீஸ், விபின் ரகுமான், முகமது அலி மற்றும் சதாம் உசேன் ஆகிய 5 பேரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

இதில், வீடுகளில் உள்ள கணிணிகள், மடிக்கணிணிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடாமல் தடுக்க காவல்துறை உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கில் தன்னை என் ஐ ஏ அதிகாரிகள் சிக்கவைக்கப் பார்ப்பதாக விபின் ரகுமான் கடந்த வாரம் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications