"மாயாவி" பட துணை நடிகை விஷ்ணுபிரியா தந்தை கொலை வழக்கு! 9 பேர் கைது! கொடைக்கானலில் நடந்தது என்ன?
கொடைக்கானல்: "மாயாவி" பட துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுப்ரியாவின் தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மாயாவி' படத்தில் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்து புகழ் பெற்றவர் விஷ்ணுப்ரியா.

இவரது தந்தை சூரியநாராயணன் (73) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே தனது சொந்த பங்களாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இரவு நடந்ததாக தெரிகிறது. ஐந்து பேர் சுற்றுலாப் பயணிகளைப் போல பங்களாவில் தங்கியிருந்தனர். இந்த பங்களாின் அறைகள் உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சுற்றுலா பயணிகள் கடந்த 20ஆம் தேதி இரவில் பங்களா ஊழியர்களான ஆறுமுகம் மற்றும் முரளியை தாக்கி துணியால் கட்டிப் போட்டனர். பின்னர் சூரியநாராயணனை நாற்காலியில் அமர வைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றி கட்டி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து அவரது தங்கச் சங்கிலி, மோதிரம், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அதன் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடி தப்பியோடியுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சொத்து ஆவணங்கள், நகைகள் மற்றும் பணம் தொடர்பான தகராறு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், மோசடி மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபட்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சூரியநாராயணன் பங்களாவை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் ஆறுமுகம் மற்றும் முரளி தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேனி எஸ்பி டாக்டர் சினேகா பிரியா விசாரணையை மேற்பார்வையிடுகிறார். மேலும், 2018-ஆம் ஆண்டு விஷ்ணுப்ரியாவின் காதலர் பிரபாகரன் கொலை வழக்கில் சூரியநாராயணன் குற்றம்சாட்டப்பட்டிருந்ததும் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த கொலை பழிவாங்கல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications