Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாயாவி" பட துணை நடிகை விஷ்ணுபிரியா தந்தை கொலை வழக்கு! 9 பேர் கைது! கொடைக்கானலில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: "மாயாவி" பட துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுப்ரியாவின் தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மாயாவி' படத்தில் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்து புகழ் பெற்றவர் விஷ்ணுப்ரியா.

Maayavi Actress Vishnupriya Father

இவரது தந்தை சூரியநாராயணன் (73) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே தனது சொந்த பங்களாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

சம்பவம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இரவு நடந்ததாக தெரிகிறது. ஐந்து பேர் சுற்றுலாப் பயணிகளைப் போல பங்களாவில் தங்கியிருந்தனர். இந்த பங்களாின் அறைகள் உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சுற்றுலா பயணிகள் கடந்த 20ஆம் தேதி இரவில் பங்களா ஊழியர்களான ஆறுமுகம் மற்றும் முரளியை தாக்கி துணியால் கட்டிப் போட்டனர். பின்னர் சூரியநாராயணனை நாற்காலியில் அமர வைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றி கட்டி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து அவரது தங்கச் சங்கிலி, மோதிரம், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அதன் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடி தப்பியோடியுள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சொத்து ஆவணங்கள், நகைகள் மற்றும் பணம் தொடர்பான தகராறு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், மோசடி மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபட்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சூரியநாராயணன் பங்களாவை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊழியர்கள் ஆறுமுகம் மற்றும் முரளி தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேனி எஸ்பி டாக்டர் சினேகா பிரியா விசாரணையை மேற்பார்வையிடுகிறார். மேலும், 2018-ஆம் ஆண்டு விஷ்ணுப்ரியாவின் காதலர் பிரபாகரன் கொலை வழக்கில் சூரியநாராயணன் குற்றம்சாட்டப்பட்டிருந்ததும் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த கொலை பழிவாங்கல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+