என் எல் சி ஊழியர்கள் தற்கொலை முயற்சி விவகாரம் : மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்
மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று என் எல் சி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video

நெய்வேலி: என் எல் சி ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணிகுறைப்பு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து நெய்வேலி என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயற்சித்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் 1ஏ சுரங்கத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் மய கொள்கையின் காரணமாக, நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தனியார் நிறுவனங்களுக்கு என் எல் சி கொடுத்து வருகிறது. தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
சுரங்கம் தனியார் வசம் சென்றபிறகு, அந்நிறுவனம் தொடர்ந்து ஆள்குறைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ஊழியர்களின் வேலை நேரமும், வேலை நாட்களுக்கும் குறைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிமாறுதலும் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கண்டித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரை ஊழியர்களின் போராட்டத்திற்கு என் எல் சி தரப்பில் இருந்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
இதனால் நேற்று விஷம் குடிக்கும் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் 700 சுரங்கப் பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், இனியும் என்எல்சி நிர்வாகத்திடம் தங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications