காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்திக்க யாருக்கும் இனி அனுமதி இல்லை!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் வெளியிலிருந்து யாரும் காவேரி மருத்துவமனைக்குள் வர இனி அனுமதியில்லை என காவல்துறை அறிவிப்பு
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் வெளியிலிருந்து யாரும் காவேரி மருத்துவமனைக்குள் வர இனி அனுமதியில்லை என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலக்கிடம்; போதிய மருத்துவ சிகிச்சை அளித்தும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை அடுத்து திமுகவினரைமட்டும் அல்லாமல் ஒட்டு மொத தமிழக மக்களையும் அதிர வைத்துள்ளது. பெரும் சோகத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.
நேற்று கருணாநிதிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் குறித்துள்ளனர். இது சம்பந்தமாக என்று 4.30 மணிக்கு 7-வது முறையாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைதான் அனைவரையுமே கண் கலங்க வைத்துள்ளது
கருணாநிதி தொண்டர்கள் திரளானோர் மருத்துவமனையின் முன் திரண்டு இருக்கின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என குறிப்பிடத்தக்கது அவர்கள் இடும் கூக்குரலில் அந்த இடமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது .
இந்நிலையில் இனி யாருக்கும் அனுமதி கிடையாது என்று மருத்துவமனை அறிவித்த உடன் பெண்கள் அழுது அவர்களின் கண்ணீரில் காவிரி மருத்துவமனையை முழுகிவிட்டது