90 வயது தந்தையைப் பார்க்கச் செல்ல நளினிக்கு பரோல் தர மறுத்த அதிமுக அரசு...!
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினிக்கு கடந்த வாரம்தான் பரோல் தர தமிழக அரசு மறுத்திருந்தது. இருப்பினும் தற்போது மற்ற 6 பேருடன் சேர்த்து அவரையும் விடுவிக்க தமிழக அரசு முன்வந்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நளினி மற்றும் ஜெயக்குமார், ராபடர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக தண்டனை குறைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்து சட்டசபையில் அறிவித்தார்.

ஆனால் இதே நளினி கடந்த வாரத்தில் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை சிறைத்துறை நிராகரித்திருந்தது என்பது முரண்டாபாடாக பார்க்கப்படுகிறது. நளினி ஒரு மாத காலம் பரோல் கேட்டு கோர்ட்டை அணுகியிருந்தார். ஆனால் அவர் பரோலில் வெளியே போனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையும், சிறைத்துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. நளினி தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மரண தண்டனை கடந்த 2000மாவது ஆண்டு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் தமிழக ஆளுநரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நளினியின் 90 வயது தந்தை நெல்லை மாவட்டம் அம்பலவாணபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரைப் பார்க்கவே பரோல் கேட்டிருந்தார் நளினி. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரர் திருமணத்திற்காக 3 நாள் பரோலில் போயிருந்தார். அதன் பிறகு அவர் பரோலில் வெளியே வந்ததில்லை என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications