நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: நடிகை நக்மா
புதுவை: நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
புதுச் சேரி மாநில மகளிர் காங்கிரஸ் செயவீரர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கமிட்டி யின் பொதுச் செயலாளர் நக்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
முன்னதாக புதுச்சேரியில் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நக்மா கூறியதாவது,

பெண்களுக்கு பாதுகாப்பில்லை...
நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியிலும் அதே நிலை...
புதுச்சேரியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்ங்கள் அதிகரித்து வருகிறது.

மாட்டிறைச்சி விவகாரம்...
மாட்டிறைச்சி விவகாரத்தை பெரிதுப் படுத்தி நாட்டில் மதரீதியிலான பிளவை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமற்ற ரேஷன் பொருட்கள்...
புதுச்சேரியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை.

வாழ்த்துக்கள்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாராயணசாமி
மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப் பேற்ற பிறகு முதல் முறையாக நக்மா புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியின் போது முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் உடனிருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications