Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்தது... இயல்பை விட 62% குறைவு

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இயல்பை விட 62% குறைவாக பருவமழை பெய்தது என இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சமாக வடகிழக்கு பருவமழை கவனிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அளவிற்கு அதிகமாக பெய்து கடும் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 30ஆம்தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதுமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதிகம் வலுப்பெறாத காரணத்தால் மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி அமையவில்லை.

புயல்களால் மழையில்லை

புயல்களால் மழையில்லை

நாடா புயலால் மழை வரும் என்று எதிர்பார்த்தும் மழை எதுவுமில்லை. வர்தா புயல் காரணமாக தமிழக கடல் பகுதியிலுள்ள ஈரப்பதமும், காற்றின் அழுத்தமும் காணாமல் போனது. குறிப்பாக புயல் தமிழகத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

விவசாயம் பாதிப்பு

விவசாயம் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து விட்டதாக கருதப்படுகிறது. வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 38 சதவீத மழையே பதிவாகி உள்ளது. பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐ தொடப்போகிறது.

62%குறைந்து போன பருவமழை

62%குறைந்து போன பருவமழை

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி அமையவில்லை. மழை அளவும் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயலபைவிட 62% குறைவாக பெய்தது என கூறினார்.

பொய்த்துப்போன பருவமழை

பொய்த்துப்போன பருவமழை

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 25 மாவட்டங்களில் இயல்பை விட 50%குறைவாக பெய்துள்ளது. கடலூர், நாமக்கல்லில் 80% வடகிழக்கு பருவமழை குறைவு
என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

142 ஆண்டுகளுக்குப்பின் குறைவு

142 ஆண்டுகளுக்குப்பின் குறைவு

1876ஆம் ஆண்டு பருவமழை 63% இயல்பை விட குறைவாக பெய்தது. 142 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 62% குறைவாக பெய்துள்ளது
என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது . அடுத்த சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஏமாற்றிய பருவமழை

ஏமாற்றிய பருவமழை

கடந்த ஆண்டைப் போல பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்யக்கூடும், வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் அஞ்சியிருந்த நிலையில் குடிநீருக்கு கூட தேவையான அளவிற்கு மழை பொழியாமல் ஏமாற்றி விட்டது என்பதுதான் உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+