“வீட்டு சுவர் ஓரத்தில் ரத்தம்.. தோண்டிப் பார்த்தா..” கழுத்தை அறுத்து கொடூரமா - போலீசார் ஷாக்!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்ய வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வட மாநில இளைஞர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே ஊரில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
ரமேஷின் வீட்டிற்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை சேத்தியாத்தோப்பில் இருந்து அழைத்து வந்துள்ளார். இவர்கள் கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

ஊர் திரும்பிய இளைஞர்கள்
மூன்று இளைஞர்களில் ஒருவர் மட்டும் கடந்த 4 நாட்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மீதமிருந்த இருவரும் அவரது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் அருகே மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தனர்.

இளைஞர் கொடூர கொலை
இதையடுத்து உடனடியாக அங்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் ரத்தம் உறைந்து கிடந்த இடத்தை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டிப் பார்த்தனர்.
அதில், வடமாநில இளைஞர்களில் ஒருவரான பவன் குமார் (22) என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை
அதைத்தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அங்கு பணிபுரிந்த மேலும் மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர் குறித்தும், அவருடன் தங்கியிருந்த மற்ற இருவர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications