Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாசிச ஆட்சியின் பச்சை துரோகம்-1000வது நாளில் பரந்தூர் போராட்டம்- திமுக அரசு மீது சீமான் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான மக்களின் போராட்டம் 1,000வது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது: 4971 ஏக்கர் வளமான வேளாண் நிலங்களை அழித்து 1000க்கும் மேற்பட்டக் குடும்பங்களை இடம்பெயரச் செய்து, தலைமுறைத் தலைமுறையாக சமூகங்களை நிலைநிறுத்தி வந்த வாழ்வாதாரங்களை சிதைத்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் ஈரநிலங்களை சீரழித்துத் திமுக - பாஜக அரசுகளால் "முன்னேற்றம்" என்ற பெயரில் திணிக்கப்படும், இத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக எதிர்த்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் ஏகனாபுரம் பொதுமக்களின் உறுதியான போராட்ட உணர்வானது தமிழர் வரலாற்றில் இடம்பெறும் புரட்சிகர எடுத்துக்காட்டாகும்.

Parandur

கண்டுகொள்ளாத திமுக அரசு

அதே நேரத்தில் 1000 நாட்கள் கடந்தும் மக்கள் போராடி வரும் நிலையில் ஒருமுறை கூட அவர்களை நேரில் சென்று சந்திக்காத ஆட்சியாளர்களின் செயல்பாடு, மக்களைப் பற்றித் துளியும் அக்கறை கொள்ளாத வெறுக்கத்தக்க ஆட்சியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்துவித சூழலியல் அழிவுத் திட்டங்களையும் எதிர்ப்பது போல மக்களை ஏமாற்றி, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை எதிர்த்துப் பொதுமக்கள் போராடிக் கண்ட வெற்றியின் பலன்களைத் தன்வசப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக அரசானது அதற்கு ஈடான அழிவுத் திட்டங்களைத் தாமே முன்னெடுத்து மக்களின் குரல்களை நசுக்கி வாழ்வாதாரங்களை சிதைத்து, செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மக்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகமாகும்.

அடக்குமுறையை ஏவுவதா?

இத்திட்டத்தை அமைக்கும் நிலைப்பாடெல்லாம் ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாகப் போராடி வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைக் கருத்தில் கொண்டாவது செயல்பட வேண்டும் என்கின்ற அடிப்படை மக்களாட்சி மாண்பைக் கூடக் கடைப்பிடிக்காமல், போராடிவரும் பொதுமக்களின் மீது அதிகாரப் போக்கினைக் கட்டவிழ்த்துக் காவல்துறையின் அடக்குமுறையை ஏவி, பாஜக அரசுக்கு எவ்விதத்திலும் சளைக்காத எதேச்சதிகாரப் போக்கினைத் திமுக அரசு முழுமையாகக் கையில் எடுத்துள்ளது. பாஜக அரசினைப் பார்த்துத் திமுக வைக்கக்கூடிய அத்தனை பாசிச முழக்கங்களும் திமுக அரசுக்கும் பொருந்தும் என்பதை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவுரை

இவ்வளவு இன்னல்கள் நிறைந்த சூழ்நிலையிலும், ஏகனாபுரம் - பரந்தூர், சுற்றுவட்டாரக் கிராம்ப் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினரின் சூழலியல் நலன் குறித்தப் புரிதலும், பூர்வகுடி நிலங்களைப் பாதுகாக்கப் போராடும் திடமான புரட்சிகர உணர்வும், நம்மை நெகிழச்செய்கிறது. பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்துவரும் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இதுநாள் வரை பொதுமக்களுக்குத் துணையாகப் போராட்டத்தில் பங்கெடுத்த நாம் தமிழர் கட்சி, தொடர்ந்து இறுதிவரை மக்கள் போராட்டத்திற்கான ஆதரவினை அனைத்துத் தளங்களிலும் அளித்து, துணைநின்று போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் இந்தப் போராட்ட உணர்வே பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவுரை எழுதட்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

protest

பூவுலகின் நண்பர்கள்

இதேபோல பூவுலகிண் நண்பர்கள் எனும் சுற்றுச் சூழல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், திராவிட மாடல்" கோட்பாடு வலியுறுத்தும் பரந்துபட்ட வளர்ச்சியை உறுதிபடுத்துவதற்காக நடைபெறும் போராட்டம்தான் "பரந்தூர் விமான நிலையத்திற்கு" எதிரான போராட்டம்.

அந்த போராட்டம் அம்மக்களுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்காக மட்டுமல்ல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை, காலநிலை மாற்றத்தின் தீவர விழைவுகளில் இருந்து காப்பதற்காவும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் இன்றோடு 1000 நாட்களை எட்டியுள்ளது. அம் மக்களின் உறுதியில் துளி கூட குறையவில்லை, அதே உயிர்ப்போடு போராடிவருகிறார்கள். இந்த போராட்டம் வெற்றி பெறுவது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+