திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள் : பணிக்குத் திரும்ப அரசு எச்சரிக்கை!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் மூன்றாவது நாளாகப் போராடி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் தேர்வு வாரியத்தின் மூலம் 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000க்கும் அதிகமான செவிலியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை முதல் டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய் கிழமை மாலை செவிலியர்கள் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் படிப்படியாக கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கினர்.
ஆனால், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி செவிலியர்களில் ஒரு பகுதியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
போராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்பவும், விடுப்பிற்கான காரணம் கேட்டும் பொதுசுகாதாரத்துறை செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பதிலளிக்காவிட்டால் பணி நீக்க நடவடிக்கை எடுக்க்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,செவிலியர்களுக்கு பணி நீக்கம் குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது.
இதனையடுத்து டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். கழிவறை, உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தராத காவல்துறையையும், தங்களை இதுவரை நேரில் சந்திக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.
செவிலியர்களின் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராடி வரும் செவிலியர்கள் கைது செய்யப்படலாம் என்றும், மொத்தமாக பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications