நாம மட்டும் ஒன்னு சேர்ந்தா இந்தியாவே காணாத வெற்றி பெறலாம்:வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ்
தஞ்சாவூர்: அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்தியாவே காணாத வெற்றியை பெற முடியும் என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகவில் நீண்ட போராட்டத்துக்குப் பின் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராகிவிட்டார். அவரது வசமாகிவிட்டது அதிமுக. இருந்த போதும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி இன்னமும் சட்டப் போராட்டங்களை நம்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அதிமுகவின் அனைத்து அணிகளையும் சாவதற்குள் சேர்த்து வைப்பேன் என சபதம் போட்டு வருகிறார் சசிகலா.

இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் வைத்திலிங்கம் இளைய மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இத்திருமணத்துக்கான அழைப்பிதழை டிடிவி தினகரனிடம் நேரில் கொடுத்தார் வைத்திலிங்கம். அதேபோல சசிகலாவிடமும் நேரில் கொடுத்தார் வைத்திலிங்கம். ஆனால் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த நிலைமையில் தம்மால் நேரில் வர இயலாது என தெரிவித்துவிட்டார். மேலும் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவுக்காகவே இன்று நடைபெற அமமுக பொதுக்குழு கூட்டத்தை டிடிவி தினகரன் ஒத்திவைத்திருந்தார்.

இன்றைய திருமண விழாவில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆருக்கு பிடித்த தேதி 7-ந் தேதி. அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் சகோதரர்களிடையே சிறு சிறு மனகசப்புகள் இருந்தாலும் சோழமண்டலத்தில் ஒன்றாக கூடி மணமக்களை வாழ்த்துகிறோம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர். அவருக்குப் பின்னர் யாராலும் வெல்லவே முடியாத மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் காலத்தில் 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக அதிமுக இருந்தது. 30 ஆண்டுகளில் இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்திய அளவில் யாரும் பெறாத வெற்றியை பெற முடியும் என்றார்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications