நாம மட்டும் ஒன்னு சேர்ந்தா இந்தியாவே காணாத வெற்றி பெறலாம்:வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ்
தஞ்சாவூர்: அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்தியாவே காணாத வெற்றியை பெற முடியும் என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகவில் நீண்ட போராட்டத்துக்குப் பின் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராகிவிட்டார். அவரது வசமாகிவிட்டது அதிமுக. இருந்த போதும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி இன்னமும் சட்டப் போராட்டங்களை நம்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அதிமுகவின் அனைத்து அணிகளையும் சாவதற்குள் சேர்த்து வைப்பேன் என சபதம் போட்டு வருகிறார் சசிகலா.

இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் வைத்திலிங்கம் இளைய மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இத்திருமணத்துக்கான அழைப்பிதழை டிடிவி தினகரனிடம் நேரில் கொடுத்தார் வைத்திலிங்கம். அதேபோல சசிகலாவிடமும் நேரில் கொடுத்தார் வைத்திலிங்கம். ஆனால் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த நிலைமையில் தம்மால் நேரில் வர இயலாது என தெரிவித்துவிட்டார். மேலும் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவுக்காகவே இன்று நடைபெற அமமுக பொதுக்குழு கூட்டத்தை டிடிவி தினகரன் ஒத்திவைத்திருந்தார்.

இன்றைய திருமண விழாவில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆருக்கு பிடித்த தேதி 7-ந் தேதி. அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் சகோதரர்களிடையே சிறு சிறு மனகசப்புகள் இருந்தாலும் சோழமண்டலத்தில் ஒன்றாக கூடி மணமக்களை வாழ்த்துகிறோம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர். அவருக்குப் பின்னர் யாராலும் வெல்லவே முடியாத மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் காலத்தில் 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக அதிமுக இருந்தது. 30 ஆண்டுகளில் இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்திய அளவில் யாரும் பெறாத வெற்றியை பெற முடியும் என்றார்.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்?












Click it and Unblock the Notifications