டிடிவி தினகரன் அறிவிப்பு.. ஓ.பி.எஸ் குதுகலிப்பு.. பேச்சுவார்த்தைக்கு ரெடி என அறிவிப்பு
இப்போது பந்து பன்னீர்செல்வம் பக்கம் உள்ளது. அவர் இஷ்டப்படிதான் இனி ஆட்டம் போகப்போகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை: அதிமுகவிலிருந்து நேற்றே பிரிந்துவிட்டதாக அக்கட்சியின் (அம்மா பிரிவு) துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்த சில நிமிடங்களிலேயே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன்தான் தங்கள் குடும்ப ஆதிக்கத்தை அதிமுகவில் நிறுவ பார்க்கிறார்கள் என்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் குற்றச்சாட்டு. இதனால் இரு அணிகளாக இருதரப்பும் முறுக்கிக்கொண்டு நின்றனர்.
இந்த நிலையில் நெருக்கடி காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி இப்போது இறங்கி வந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் பேட்டியளித்து வருகின்றனர்.

அமைதி ஓ.பி.எஸ்
பன்னீர்செல்வம் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்க உள்ளதாக எடப்பாடி குழு அறிவித்துள்ளது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி அமைதியாகத்தான் இருந்தது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் திடீரென மாற்றம் நிகழ்ந்துள்ளது.

டிடிவி தினகரன் பேட்டி
இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அதிமுகவிலிருந்து நேற்றே தான் ஒதுங்கி விட்டதாக தெரிவித்தார். இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ஓ.பன்னீர்செல்வம். மிகவும் மகிழ்ச்சியான முகத்தோடு பேட்டியளித்தார் அவர்.

முதல் வெற்றி
அப்போது, தங்கள் தர்ம யுத்தத்தில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். எடப்பாடி தரப்போடு அமர்ந்து பேசி உடன்பாட்டுக்கு வர தயார் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிரடி ஆட்டம்
இப்போது பந்து பன்னீர்செல்வம் பக்கம் உள்ளது. அவர் இஷ்டப்படிதான் இனி ஆட்டம் போகப்போகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மத்திய அரசின் அபார பலத்துடன் உள்ள பன்னீர்செல்வம் இனிமேல் தனது ஆட்டத்தை அதிரடியாக தொடங்கப்போகிறார் என ஆரூடம் கூறுகிறார்கள் அவர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications