புதுக்கோட்டை அருகே சோகம்! பிறந்தநாள் விழாவில் அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி! 26 பேர் பாதிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் மேலும் 26 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் வேளாணி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு இன்று பிறந்தநாள். இதனால் பார்ட்டி கொடுக்க அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அசைவ உணவு சாப்பிட்டவர்களில் 26 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் உணவருந்திய கருப்பையா என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 26 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகளும் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications