பொங்கலுக்கு வண்டலூர் செல்கிறீர்களா?... அப்போ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க குட்டீஸ்!
பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் பூங்காவுக்கு வரும் மக்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
காஞ்சிபுரம் : பொங்கல் பண்டிகை முன்னிட்டு வண்டலூர் பூங்காவுக்கு வரும் தரும் மக்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான பறவைகள், விலங்குகள் என உள்ளன. இங்கு சனி, ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மனித குரங்குகள், யானை, ஓட்டகசிவிங்கி உள்ளிட்ட விலங்குகளை பார்க்க ஏராளமானோர் பூங்காவுக்கு வருகை தருவது வழக்கம். மேலும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அன்று கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

கூட்ட நெரிசல்
பொங்கல் பண்டிகை 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூங்காவில் டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

நுழைவு சீட்டு மையங்கள்
மேற்கண்ட தேதிகளில் பூங்கா காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் கஷ்டமின்றி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வனத்துறை, காவல் துறை
பொதுமக்கள் அதிகம் கூடுவர் என்பதால் அசம்பாவிதங்களை தடுக்க வனத்துறை மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் சாதாரண உடையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பர். இது தவிர 32 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

தணிக்கை தீவிரம்
பூங்கா விலங்குகளுக்கு பார்வையாளர்கள் நொறுக்குத்தீனிகளை போடுவதால் அவற்றுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் கவருடன் போடும் தின்பண்டங்களால் அவை தொண்டையில் சிக்கி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நொறுக்குத் தீனி, தின்பண்டங்களுக்கு அனுமதி கிடையாது. இதை தணிக்கை செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,500 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு கூடுதலாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications