For Daily Alerts
Just In
ஊட்டியில் கடும் மழை.... சாலையோர மரங்கள் வீழ்ந்தன - வீடியோ
ஊட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் மழை பெய்த காரணத்தால் சாலையில் மரங்கள் வீழ்ந்தன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு உண்டானது. சுற்றுலா பயணிகள் கார் மீதும் மரங்கள் சாய்ந்தன.
ஊட்டி: ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் கடும் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்தன. மேலும் சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் சாய்ந்ததால் இருவர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி குன்னூரில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று இரவு வரிசையாக மரங்கள் சாய்ந்துள்ளன. அப்போது சுற்றுலாப்பயணி ஒருவரின் கார் மீது மரம் சாய்ந்துள்ளது.
இதில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகளும் சுற்றுலா பயணிகள் வாகனங்களும் பல மணிநேரம் சாலையில் காத்துக்கிடந்தன. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
Comments
English summary
In Ooty Mettupalayam yesterday night heavy rain and due to this rain trees fallen on road and traffic affected.
Story first published: Sunday, May 21, 2017, 12:17 [IST]