வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி அவசியம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்
வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி பெறுவது அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை: வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி பெறுவது அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் 30 வருட பொது வாழ்க்கையின் மூலம் இந்திய அரசியல் போக்கையே மாற்றியவர் அறிஞர் அண்ணா. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் அதிமுக மக்கள் தொண்டாற்ற கழக உடன்பிறப்புகள் ஒவ்வொரும் உறுதி ஏற்று கழக அரசைக் காத்து மக்களிடையே நற்பெயரை பெற்று வரும் காலங்களில் நடக்கும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது அவசியம் எனக்கூறியுள்ளனர்.